நற்பதில்!

மௌனந்தானே நற்பதில்!

நற்செய்தி: யோவான் 8:6.

நல்வழி:


நம்மைக் குற்றப்படுத்தும் நோக்கில்,

நயவஞ்சகத்தைச் சொல்பவர்கள்,

தம்மைத் திருத்திக் கொள்வதற்கு,

தருவது எது நற்பதில்?

பொம்மை போன்று பேசாதிருத்தல்,


போதும் போதும் என்பவர்கள்,

மும்மை தெய்வச் செயலைக் காண்பர்;

மௌனந்தானே நல் மதில்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.