மௌனந்தானே நற்பதில்!
நற்செய்தி: யோவான் 8:6.
நல்வழி:
நம்மைக் குற்றப்படுத்தும் நோக்கில்,
நயவஞ்சகத்தைச் சொல்பவர்கள்,
தம்மைத் திருத்திக் கொள்வதற்கு,
தருவது எது நற்பதில்?
பொம்மை போன்று பேசாதிருத்தல்,
போதும் போதும் என்பவர்கள்,
மும்மை தெய்வச் செயலைக் காண்பர்;
மௌனந்தானே நல் மதில்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.