நற்செய்தி

இன்றைய நற்செய்தி!
மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மறைநூல் வாக்கை வழங்குகிறேன்.
பகிர்தலால் இன்பம் பரவிடவே,
படைத்தவரிடத்தில் வேண்டுகிறேன்.
நல்வாழ்த்து:
உம்மைப் புகழ்வதே என் வாழ்வு.
உணர்ந்து நடப்பதே நல் வாழ்வு.
செம்மை வழியைக் கடை பிடித்துச்
செயலில் புகழ்வதே நல் வாழ்த்து!
நல்வாக்கு:
மத்தேயு 25:16-18
”ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.”

நல்வாழ்வு:

ஒன்று தானே என்று எண்ணி
ஒளித்துப் புதைத்தான் ஒருவன்.
இன்று இப்படிச் செய்யாதிருக்க
எடுத்துரைக்கிறார் இறைவன்.
சென்றுபோன நாட்களில் செய்த,
தவறை இனிமேல் தொடராதீர்;
என்று கூறும் அடியனும் பணிய
எனக்கும் வேண்டல் ஏறெடுப்பீர்!
ஆமென்.

Leave a Reply