தொழு நோயாளரையும் தொட்டுச் சேர்க்கும் அன்பு!

தொழு நோயாளரையும் தொட்டுச் சேர்க்கும் அன்பு!
நற்செய்தி மாலை: மாற்கு 1:40-41.
“ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ‘ நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ‘ என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ‘ நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! ‘ என்றார்.”
நற்செய்தி மாலை:
தொற்றும் நோயில் கொடிய,
தொழுநோய் கொண்டு மடிய,
சற்றும் விரும்பா ஒருவர்,
சட்டம் மீறி வந்தார்.
முற்றும் வெறுக்கும் நிலையே;
மும்மை இறையில் இலையே.
பற்றின் உறுதி கண்டார்;
பரிவில் சேர்த்துக் கொண்டார்!
ஆமென்.

Leave a Reply