தலைவர்கள்!

தலைவர்கள்!
நற்செய்தி: யோவான் 11: 46-48. 

46. அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.

47. அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து: நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.

48. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.

நல்வாழ்வு:

தங்கள் வளத்தை நாடிச் செல்வர்,
தலைவர் என்று வந்துவிடின்,
உங்கள் வளர்ச்சி எண்ண மாட்டார். 
ஊரறிந்த உண்மை.
திங்கள் ஞாயிறு பாடிச் சொல்வர்,
தெரியும் மெய்யே தந்துவிடின்,
எங்கும் மக்கள் வாழ்வடைவார்;
எண்ணுவோமா நன்மை?

ஆமென். 

கெர்சோம் செல்லையா.