காட்டிலும் வாழ்ந்தார்!

காட்டிலும் வாழ்ந்தார்!

நற்செய்தி: யோவான் 11:54.

54. ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார். 

நல்வாழ்வு: 

காட்டிலும் வாழ்ந்து ஊழியம் செய்தார்,
கடவுளின் மைந்தன் ஏசு. 
நாட்டிலே இன்று நடப்பது என்ன?
நற்பணிப் பெயரில் தூசு. 

கோட்டையும் மேட்டையும் கேட்டவர் யாரோ?

கொணர்ந்தவை யாவும் மாசு.
கேட்டினுள் நுழையும் முன்பே திருந்து;
கிறித்துவாய் எளிமை பேசு!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.