கண்ணுடன் வாயும் திறந்தது!

நற்செய்தி: யோவான் 9:30-33.

நல்வழி:


கண்ணுடன் வாயும் திறந்ததுவே;

கடவுட் பற்றும் புறம் வருதே. 

எண்ணினில் இவைகள் இறையருளே. 

இயேசு வழங்கும் நற்பொருளே.

மண்ணினில் வந்தது நம் திறமா?

மறுபடி உயர்வதும் நம் அறமா?

திண்ணையில் விழுமுன் நினைப்போமா?


தெய்வ அன்பில் இணைப்போமா?


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.