ஒளி!

ஒளி வீசுவோம்!

வாக்கு: யோவான் 11: 8-10. 

வாழ்வு:

கல்லால் அடிக்க வந்திருந்தும்,

கண்ட நெஞ்சம் நொந்திருந்தும்,

பொல்லார் என்று வெறுக்காமல்,

புவிக்கு ஒளி தருபவர் யார்?

சொல்லாம் இயேசு செல்வதுபோல்,

சொற்படி நடந்து வெல்பவராய்,

எல்லாயிருளையும் அகற்றிவிட, 

இயேசு வழி வருபவர் யார்?

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.