எவ்வளவு உண்மை?

எத்தனை விழுக்காடு உண்மை?


எத்தனை விழுக்காடென்று  பார்த்தேன்;

என்னுள் உண்மை எவ்வளவு?

அத்தனை அளவாய்  ஆண்டவர் பார்த்தேன்;

அறிவுக் குறைவு அவ்வளவு!

மொத்தமும் உண்மையாக்கக் கேட்டேன்;

மும்மை இறையின் அளவு. 

நித்தமும் வளரச் சொல்வதும் கேட்டேன்;

நிறைக்கும் அருளின் அளவு!


-கெர்சோம் செல்லையா.