என்ன பாடுகிறோம்?

இறையறிந்தோர், பாடுகிறார்!

காசு காசென்றே, ஓடுகிறார்;
கை நிறையவே, ஆடுகிறார்.
தூசு தூசென்றே, சாடுகிறார்;
துயரில், இறை தேடுகிறார்!
மாசு நீங்கிட யார் பாடுவார்?
மதி பொங்கிட யார் பாடுவார்?
ஏசு தங்கிட யார் பாடுவார்?
இறையறிந்தால், பாடுவார்!

-கெர்சோம் செல்லையா.