ஊருக்காக ஒருவர் இறத்தல்!

ஊருக்காக ஒருவரைக் கொல்லல்!
நற்செய்தி: யோவான் 11:49-50. 

49. அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது;

50. ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.   

நல்வழி:

ஒருவரைக் கொன்று ஊரைக் காத்தல்,
உயர்ந்த அறிவு ஆகாது. 
தெருமுனை ஏழையும் வாழ வேண்டும்;
தெய்வ விருப்பு நோகாது. 
எருவெனச் செல்லும் இப்புவி வாழ்வில்,
எவரையும் இழக்கல் ஆகாது. 
அருவருப்பான கருத்துப் பருப்பும்,
அறத்தின் நீரில் வேகாது!
ஆமென். 

-கெர்சோம் செல்லையா.