ஊரின் விளக்காய் மாற்றும்!

​நற்செய்தி மாலை: மாற்கு: 4:21-23

“இயேசு அவர்களிடம், ‘ விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
விளக்கைக் கொளுத்தி மறைத்து வைக்கும்,
வெறுப்பின் வேலையை எனில் பாரும்.
அளக்கும் மரக்கால் உள்ளே ஒளிக்கும்,
அடியனை வெளியில் நீர் சேரும்.
தழைக்காதவனாய்த் தாழக் கிடக்கும்,
தவறிய என்னை நீர் தேற்றும்.
உழைக்காதவனாய் இருந்தது போதும்;
ஊரின் விளக்காய் எனை மாற்றும்.
ஆமென்.

Leave a Reply