உயிர் தரும் உணவு!

உயிர் தரும்  உணவு!
நற்செய்தி: யோவான் 6:48-51.

நல்வழி:


மூன்று வேளை உணவுண்டாலும்,

முடிவில் உயிரைக் காத்திடுமா?

தோன்று வழிகள் பல கண்டாலும்,

தேயா வாழ்வுள் சேர்த்திடுமா?

ஈன்று இங்கே இறங்கி வந்த,

இயேசுவின் வாக்கு காத்திடுமே.

சான்று பகரும் அவர் விருந்துண்டு,

சாகா வாழ்வும் சேர்த்திடுமே.


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.