இறை மாட்சி!

இறை தரும் மாட்சி!

இறை வாக்கு: யோவான் 12: 23-25.

23. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.

24. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.

25. தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.

இறைவாழ்வு:

மாட்சி கேட்டு மாயும் மனிதா,
மன்னர் வாக்கு கேள்.
காட்சி என்று களனி பார்த்து,
கற்று அறிந்து கொள்.
வீட்சி இல்லை, விதைப்பு ஐயா,
விளையுமென்று தாழ்.
ஆட்சி செய்ய தாழ்ச்சி தேவை;
அன்பு கொண்டு வாழ்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.