இறைவாக்கு!

இறை வாக்கு!நற்செய்தி:

யோவான் 7:16-17.16.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.
17. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
நல்வழி:
சொந்தக் கருத்தைப் பிடித்துக் கொண்டு,

சொல்லால் விழுவோர் எத்தனை பேர்?

அந்தக் கருத்தில் உண்மை உண்டோ?

ஆய்ந்து நடப்போர் எத்தனை பேர்?

எந்தக் கருத்தும் இறையின் விருப்பா,

என்று பார்ப்போர் எத்தனை பேர்?

தந்தை இறையின் வாக்குரைக்கும்,

மைந்தன் வழியில் எத்தனை பேர்?

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.