இயேசுவின் தொடுதல் எப்படி?

இயேசுவின் தொடுதல் எப்படி?
நற்செய்தி மாலை: மாற்கு 3:9-1௦.
“மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார். ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்.”
நற்செய்தி மலர்:
தீய வாழ்வால் நலம் கெட்டார்,
திரளாய்ப் பெருகி வந்திட்டார்.
தூயனேசுவை நெருங்கிட்டார்;
தொட்டுப் பார்க்க விரும்பிட்டார்.
 
ஆயன் இயேசு கண்டிட்டார்;
அன்பின் தொடுதலைக் காட்டிட்டார்.
பாய்மரப் படகில் அமர்ந்திட்டார்;
பலரது நெஞ்சைத் தொட்டிட்டார்!
ஆமென்.
 



 

Leave a Reply