ஆறுதல்!

இழப்பில் ஆறுதல்!
வாக்கு: யோவான் 11: 17-19.

17. இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார்.

18. பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.

19. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். 

வாழ்வு:

ஆறுதல் சொல்லப் பலர் இருந்தாலும்,
ஆற மறுக்கிற இழப்பு,
தேறுதல் என்கிற இறை வரப்போகும்.
தெளியாதிருப்பது பிழைப்பு.    
மாறுதல் கண்டவர் மகிழ்ந்துரைக்கும்,
மாற்றி அமைக்கும் அழைப்பு,
பேறுடன் உம்மை அண்டிக் கொள்ளும். 
பிழை நீக்கவே, உழைப்பு!   

ஆமென் 

-கெர்சோம் செல்லையா.