ஆயர்!

ஆயர்!

வாக்கு: யோவான் 10:1-2. 1.

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.

வாழ்வு:

ஆயர் பண்பை ஆண்டவர் சொன்னார்.

அறிந்து நடப்பது நம் கடமை.

நேயர் எவரும் நேரெதிர் எண்ணார்;

நேர்மை தரட்டும் நம் உடமை.

தீயர் ஒளிந்து திருடிட முனைவார்;

திருட்டு தடுப்பது நம் கடமை.

தூயர் வாக்கின் மழையில் நனையார்

தேடா மீட்பரும், நம் உடமை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.