ஆயர்!
வாக்கு: யோவான் 10:1-2. 1.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.
வாழ்வு:
ஆயர் பண்பை ஆண்டவர் சொன்னார்.
அறிந்து நடப்பது நம் கடமை.
நேயர் எவரும் நேரெதிர் எண்ணார்;
நேர்மை தரட்டும் நம் உடமை.
தீயர் ஒளிந்து திருடிட முனைவார்;
திருட்டு தடுப்பது நம் கடமை.
தூயர் வாக்கின் மழையில் நனையார்
தேடா மீட்பரும், நம் உடமை!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.