ஆயன் குரல்!

ஆயன் குரல்!
வாக்கு: யோவான் 10:27-28. 

வாழ்வு:


ஆயன் குரலைக் கேட்கும் ஆடு,

அவன் வழி வந்து செல்லும். 

தூயன் வாக்கைக் கேட்பதோடு,

தொடர இறை பின் நில்லும்.

வாயும் வயிறும் வாழ்க்கை என்று,

வாழும் வழி தான் கொல்லும். 

தேயும் அந்நிலை தெரியும் முன்பு,

தெளிவு பெற்று வெல்லும்!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.