அளக்கிற அளவு!

அளக்கிற அளவு!

நற்செய்தி மாலை: மாற்கு 4: 24-25.
“மேலும் அவர், ‘ நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும். ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
எந்த அளவில் அளக்கின்றேன்,
என்பதை அறிந்த இறைமகனே,
இந்த நாளில் என் குறையை,
அறிக்கை செய்து அளப்பேனே!
உந்தன் அளவின் பெருந்தன்மை 
உள்ளில் ஊறி வெளிவரவே,
பைந்தமிழில் பாடுகின்றேன்;
பழியை நீக்கி, அளந்திடுமே!
ஆமென்.


Leave a Reply