அருளும் நலமும் சொரியட்டும்!


​அருளும் நலமும் சொரியட்டும்!

நற்செய்தி மாலை: மாற்கு 4:20

“நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர் ‘என்றார்.”
நற்செய்தி மலர்:
முப்பது அறுபதாய் மாறட்டும்;
அறுபது நூறாய்த் தேறட்டும்.
இப்புவி வாழ்வில் நன்மைகளை,
யாவரும் பெற்று கூறட்டும்.
எப்படி நன்மை செய்வதென,
இயேசுவைப் பார்த்துத் தெரியட்டும்.
அப்படிச் செய்வோர் வாழ்வுதனில்,
அருளும் நலமும் சொரியட்டும்!
ஆமென்.

Leave a Reply