தூற்றும் மாந்தர் நிறைந்துள்ள,

தூய்மை குன்றிய தேர்தலிலும்,

மாற்றம் இறையால் வருமென்று,

மா நம்பிக்கை கொள்கிறேன்.

ஆற்றல் மிகுந்தும் அன்பில்லார்,

அரசியலாட்சியில் தோற்பதும்,

போற்றும் தெய்வத் தீர்ப்பென்று,

பொய்யாமொழி சொல்கிறேன்!

-கெர்சோம் செல்லையா.

May be a graphic of text that says 'PSALM SALM37 37 DailyEffectivePrayer.com'

ஏசாயா பதினான்கு எடுத்துரைக்கும் பேரறிவு,

இன்றும் பேசுவதால் எழுதுகிறேன்.

ஓசையாய் ஒரு கூட்டம் ஓயாது பொய்யுரைத்து,

உண்மை பூசுவதால் எழுதுகிறேன்.

பேசாமல் இருப்போரின் பிழைகள் திரும்பி வந்து,

பிண வாடை வீசுவதால் எழுதுகிறேன்.

மாசான கருத்தியலில் மாட்டியவர் மீட்படைந்து,

மறை மணம் வீசிடவே எழுதுகிறேன்.

-கெர்சோம் செல்லையா.

No photo description available.

பத்து நாட்களில் முடிக்கும் பயணம்

பற்பல ஆண்டுகள் ஆவதற்கு,

கத்திடும் கூட்டம் கலகம் செய்தது

காரணம் என்று தெரிகிறது.

சொத்து என்றவர் செல்கிற நாடும்

சொந்த இறையின் அருளென்று,

புத்தியில் ஏற்க மறுத்தவர் கண்டு,

புலம்பும் நெஞ்சு எரிகிறது!

(எண்ணிக்கை 13 &14)

May be a graphic of text that says 'The Rebellion Isrdelites of the Numbers 13-14'

அலையும் நாளில் ஆண்டவர் தொழவே,

அவர்கள் செய்த கூடாரம்.

நிலைவாழ்வெங்கெனும் கேள்வி எழவே,

நெஞ்சுள் அடித்த டமாரம்.

விலை கொடுத்தெவரும் வாங்கிட அரிதாம்,

விண் மீட்பீயும் திருப்பொருட்கள்,

சிலையாய் அல்ல, முன்னுரை நெறியாம்;

செய்தார் அவர்கள் அந்நாட்கள்!

(விடுதலைப் பயணம் 25-27).

May be an image of text

நல்லிறை நம்முடன் இருக்கும் எண்ணம்

நாளும் வளர்ந்து ஒட்டவே,

செல்லுமிடங்களில் வைக்கும் வண்ணம்

செய்தார் உடன்படிப் பெட்டியே .

இல்லம் கட்டி நிலைத்திடச் செய்யும்,

இனிய நாட்களும் கிட்டவே

அல்லாததால், அருளினைப் பெய்யும்,

அம்முறை கூட சரிப் பட்டதே!

(விடுதலைப் பயணம் 24 & 25).

No photo description available.

அத்திருச்சட்டம் கொடுத்த நாளில்,

ஆண்டவர் செய்த உடன்படிக்கை,

பத்திரமாக இசரயெல் காக்க,

பாலைப் பயணம் தொடர்கிறது.

இத்திருச்சட்டம் பெற்ற மக்கள்,

இதன்படி ஒழுகி நடப்பதற்கு,

ஒத்துழைக்கும் தலைவரும் தந்தார்;

ஒழுக்கமும் வளர்ந்து படர்கிறது!

(விடுதலைப் பயணம் 18-24)

May be an image of text that says 'What are the Mosaic Laws? 248 Positive ("You shall... 365 Negative ("You shall not...") 613'

கல்லில் எழுதி கட்டளை கொடுத்தார்;

கடவுட் கட்டளை ஆய்வோமா?

சொல்லில் நான்கு இறையுறவென்றார்;

சொற்படிப் பணிய, செய்வோமா?

நல்லுறவில் நாம் பிறருடன் வாழ,

நான்குடன் இரண்டு அவர் த்ந்தார்.

எல்லையில்லா இறை பேரன்பை,

யாவரும் அணிய, பத்தீந்தார்!

(விடுதலைப் பயணம் 20:1-17).

May be an image of 1 person and text that says 'หวคม பத்து கட்டளைகள் என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 2. யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். 3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. 4. ஒய்வராளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. 5. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்னுவாயாக. 6. கொலை செய்யாதிருப்பாயாக. 7. விபசாரம் செய்யாதிருப்பாயாக. 8. களவு செய்யாதிருப்பாயாக. 9. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி Dis சொல்லாதிருப்பாயாக. 0. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக. யாத்திராகமம் 20 3-17. BIBLE WORDS'

பிறக்கச் செய்பவர் இறைவனாதலால்,

பிறப்போர் எவரும் இறை மக்கள்.

உறவுக் கூட்டில் முன் பின் உண்டு.

ஒவ்வொரு இனமும் அவர் மக்கள்.

இறை வாழ்வென்னும் மீட்பு சொல்லும்,

ஏற்பாட்டில் யார் முதல் மக்கள்?

அறத்தின் திட்டம், ஆண்டவர் சட்டம்,

அடைந்த இசரயெல் மக்கள்!

(விடுதலைப் பயணம் 19 & 20).

May be an image of text

பாலை நிலம் வழி செல்லும் நாளில், 

பருகிடத் தண்ணீர் கிடைக்காமல்,

காலை தொட்டு மாலை வரையில், 

கடுஞ்சினத்துடன் தேடினார்.

கோலை எடுத்து மோசே அடிக்க, 

கொடுக்கும் பாறை கிறித்துவால்,

நாளை உயிர் நீர்  நாமும் பெறுவோம்;

நம்பாதவர்தான் வாடினார்!

(விடுதலைப் பயணம் 17:1-7).

மிகுதியாய்ப் பலபேர் ஓடி எடுத்தும்,

மீதியாய் மன்னா நிரப்பவில்லை.

பகுதியில் கொஞ்சம் கை பிடித்தும்,

பசித்து, குறைவென இரக்கவில்லை.

தகுதியும் பண்பும் பலவாயிருந்தும்,

தருவதில் வேறு படவில்லை.

யகுவா போதும், என்று திருந்தும்,

எவரையும் கை விடவில்லை!

(விடுதலைப் பயணம் 16).

May be an image of stone-fruit tree and text that says 'Whoever gathered much had nothing left over, and whoever gathered little had no lack. lillieamma.com 2 Corinthians 8:15'