தூற்றும் மாந்தர் நிறைந்துள்ள,
தூய்மை குன்றிய தேர்தலிலும்,
மாற்றம் இறையால் வருமென்று,
மா நம்பிக்கை கொள்கிறேன்.
ஆற்றல் மிகுந்தும் அன்பில்லார்,
போற்றும் தெய்வத் தீர்ப்பென்று,
பொய்யாமொழி சொல்கிறேன்!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
ஏசாயா பதினான்கு எடுத்துரைக்கும் பேரறிவு,
இன்றும் பேசுவதால் எழுதுகிறேன்.
ஓசையாய் ஒரு கூட்டம் ஓயாது பொய்யுரைத்து,
உண்மை பூசுவதால் எழுதுகிறேன்.
பேசாமல் இருப்போரின் பிழைகள் திரும்பி வந்து,
பிண வாடை வீசுவதால் எழுதுகிறேன்.
மாசான கருத்தியலில் மாட்டியவர் மீட்படைந்து,
மறை மணம் வீசிடவே எழுதுகிறேன்.
-கெர்சோம் செல்லையா.
பாலை நிலம் வழி செல்லும் நாளில்,
பருகிடத் தண்ணீர் கிடைக்காமல்,
காலை தொட்டு மாலை வரையில்,
கடுஞ்சினத்துடன் தேடினார்.
கோலை எடுத்து மோசே அடிக்க,
கொடுக்கும் பாறை கிறித்துவால்,
நாளை உயிர் நீர் நாமும் பெறுவோம்;
நம்பாதவர்தான் வாடினார்!
(விடுதலைப் பயணம் 17:1-7).