எது எது வேண்டும் என்றிறை கேட்டால்,
எதை நாம் இன்று கேட்கிறோம்?
புது விதமான ஆவல்கள் தொட்டால்,
புழுதிக் காற்றில் முடிக்கிறோம்.
பொது அறிவென்று சாலமொன் கேட்டு,
புது நூல் யாத்ததும் காண்கிறோம்.
இது போல் இன்று இறையடி தொட்டு,
ஏங்கின் அறிவு பூணுவோம்!
(1 அரசர்கள் 3:5-15)
