ஒன்பது வகையில் துன்பினைக் கண்டும்,
உணர மறுத்த நைல் நாட்டார்,
இன்னொரு துன்பம் முதல் பேறழிக்க,
இசரயெல் முன்னே துடிக்கிறார்.
தன்னல ஆணவத் தலைமை தோண்டும்,
தாழ் குழி வீழ்கிற அருள் கூட்டார்,
நன்னிலை அடைந்து நலமாய்ச் செழிக்க,
நம்பினில் இறையே பிடிக்கிறார்!
(விடுதலைப் பயணம்: 7:1 – 12:30).
