தீமையினின்று காப்பவர்!
இறை மொழி : யோவான் 17:15.
15. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
இறை வழி:
இடி மின்னல், காற்றும் மழையும்,
எல்லோருக்கும் வருவதுபோல்,
அடி, உதை, வலியும் துன்பும்,
அனைவருக்கும் வந்தாலும்,
பிடி எந்தன் அருள் எனக்கூறும்,
பிரியா தெய்வம் காக்கையில்,
தடி, வெடி தீமைகள் யாவும்,
தவிடு பொடி ஆகிடுமே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.