யாரைத் தேர்வு செய்கிறோம்?
இறை மொழி: யோவான் 18:39-40.
39. பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.
40. அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.
இறை வழி:
திருடரும் தூயரும் தேர்வில் நின்றால்,
திருடரே வெல்கிறார்; காணுகிறோம்.
அறிஞரும் மடையரும் போட்டியிட்டால்,
அறிஞர் தோற்கிறார்; நாணுகிறோம்.
உருப்பட மாட்டா உலகோர் வென்றால்,
ஊர்தான் அழியும்; கோணுகிறோம்.
இறையறிவில்லா நிலைமை இதுதான்;
எனவே, இயேசுவைப் பூணுகிறோம்!
ஆமென்.
