நற்செய்தி

நம்பிக்கை தருவது இறைவாக்கு;
நாமும் பெறுவோம் நல்வாழ்வு!
நல்வாழ்த்து:
மீட்பர் இயேசுவைப் போற்றுகிறேன்;
மீண்டும் மீண்டும் போற்றுகிறேன்.
கேட்பவர் நீங்களும் சேர்ந்திடலாம்.
கிறித்து புகழைப் பாடிடலாம்!
நல்வாக்கு:
மத்தேயு 24:37-39.
“நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள்.”
நல்வாழ்வு:
உண்டு குடித்து, உறங்கி எழுந்து
ஊழலில் உழல்கின்றார்.
பெண்டிரைத் தேடி பேதைமை போற்றி
பெயரை இழக்கின்றார்.
கண்டு துடிக்கும் கடவுளின் விருப்பைக்
கருத்தாய்ச் சொல்பவர் யார்?
தொண்டு புரிதலே வாழ்க்கையென்று,
தூய்மையில் வாழ்பவர் யார்?
ஆமென்.

Leave a Reply