வாரும், ஆண்டவரே வாரும்!
அறுபது, எழுபது, எண்பதென்று,
அப்படி அகவை வளர்கிறதா?
ஒருவரும் அறியா நாளினின்று,
ஓராண்டிழந்து தளர்கிறதா?
தெருமுனை வந்த நடுவரின்று,
தேடும் காட்சி தெரிகிறதா?
திருடன் நுழைவதுபோல் அன்று,
தெய்வமுமழைப்பார் புரிகிறதா?
வாரும், ஆண்டவரே வாரும்!
-கெர்சோம் செல்லையா