வாரும், ஆண்டவரே வாரும்!


அறுபது, எழுபது, எண்பதென்று,     


அப்படி அகவை வளர்கிறதா?

ஒருவரும் அறியா நாளினின்று, 

ஓராண்டிழந்து தளர்கிறதா?

தெருமுனை வந்த நடுவரின்று,

தேடும் காட்சி தெரிகிறதா?

திருடன் நுழைவதுபோல் அன்று,

தெய்வமுமழைப்பார் புரிகிறதா? 


வாரும், ஆண்டவரே வாரும்!


-கெர்சோம் செல்லையா