பகை வளர்க்கிறார்!
நற்செய்தி : யோவான் 7:6-8.
நல்வழி:
நன்மை தீமை அறியார்தான்,
நாட்டில் பெருத்து இருக்கிறார்.
பின்னல் வேலை சூதைத்தான்,
பேரறிவாக்கிப் பெருக்கிறார்.
பன்மை மாந்தர் அதனால்தான்,
பகை வளர்த்து வெறுக்கிறார்.
தன்னை ஆயும் மனிதர்தான்,
தவறு விட்டுச் சிறக்கிறார்!
ஆமென்.
-கெரசோம் செல்லையா.